இந்த உலகத்தில் சிலர் செயற்க்காரிய வீரச்செயலகளும், பரோபகார செயல்களும் புரிந்து மக்களின் உள்ளத்தை கவர்கிறார்கள். இன்னும் சிலர் இசை பாடியும், சித்திர சிற்ப்பக்கலைகளில் அற்ப்புதங்கள் அளித்தும் பிறருடைய போற்றுதலுக்கு உள்ளாகிறார்கள். வேறு சிலர் கருவிலேயே திருவுடையோராய் பிறக்கும்போதே சிறப்புடையவராக பிறந்துவிடுகிறார்கள். குறிப்பிட்ட காரணம் எதுவும் இன்றி பழகுபவர்களின் அன்பை பெற்று விடுகிறார்கள். ஆகா இயற்க்கை அன்னை மிக்க பாரபட்சம் உடையவள் போலும்! ஆனாலும் நாம் என்ன கண்டோம்? இயற்க்கை அன்னை அத்தகைய வசீகர சக்தியை அவர்களுக்கு அளிக்கும் போது அதற்க்கு இணையாக வேறு என்ன பிரதிகூலமான அம்சங்களையும் அளித்திருக்கிறாளோ, நமக்கு என்ன தெரியும்? அயோத்தி மாந்தரின் உள்ளன்பை கவர்ந்த இராமர் உலகில் சாதாரன மனிதர் யாரும் அடையாத துன்பத்தையெல்லாம் அடைய வேண்டியிருந்ததல்லவா? எம்முடைய பண்பும் பழகும் விதமும் மனுடத்தின் பால் கொண்ட பற்றும் என்னுடன் பழக நேர்ந்தவர்களின் அன்பை கவரும். வாருங்களேன் சேர்ந்து பயணிப்போம்